செய்திகள்

நெய்வேலி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.45 லட்சம் மோசடி: 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2017-03-03 17:02 IST   |   Update On 2017-03-03 17:02:00 IST
நெய்வேலி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.45 லட்சம் மோசடி செய்த 4 பேர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.போலீசார் 4 பேரை தேடி வருகிறார்கள்.

நெய்வேலி:

நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி அஞ்சலாட்சி (வயது 50). இவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மனைவி ராணியிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்தார்.

ஏலச்சீட்டு முடிந்த நிலையில் முழுத்தொகையையும் அஞ்சலாட்சி கேட்டபோது ராணி அதை கொடுக்கவில்லை. தொடர்ந்து கேட்டபோதும் அவர் பணத்திற்கு சரியான உத்தரவாதம் கொடுக்கவில்லை.

இதனால் அஞ்சலாட்சி மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் ராணி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி என்னைப்போல் பலரிடம் ரூ. 45 லட்சத்தை மோசடி செய்து உள்ளதாகவும், ராணி மற்றும் அவரது மகன் ரமேஷ் மற்றும் உறவினர்கள் சிவரஞ்சனி, பானுமதி ஆகிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Similar News