செய்திகள்
பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவியிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது
பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவியிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16). இவர் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
ஐஸ்வர்யா காந்தலவாடி கிராமத்தில் இருந்து தினமும் சிறுகிராமத்துக்கு சைக்கிளில் சென்று வருவார். அதேபோல நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுகிராமம் ஏரி அருகே ஐஸ்வர்யா சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் பிரசாத் (21) உள்பட 3 பேர் ஐஸ்வர்யாவிடம் காதலிக்க சொல்லி வலியுறுத்தினர்.
இதனால் கூச்சல் போட்ட ஐஸ்வர்யாவை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஐஸ்வர்யாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து ஐஸ்வர்யா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்கு பதிவு செய்து பிரசாந்த் என்ற வாலிபரை கைது செய்தார். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16). இவர் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
ஐஸ்வர்யா காந்தலவாடி கிராமத்தில் இருந்து தினமும் சிறுகிராமத்துக்கு சைக்கிளில் சென்று வருவார். அதேபோல நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுகிராமம் ஏரி அருகே ஐஸ்வர்யா சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் பிரசாத் (21) உள்பட 3 பேர் ஐஸ்வர்யாவிடம் காதலிக்க சொல்லி வலியுறுத்தினர்.
இதனால் கூச்சல் போட்ட ஐஸ்வர்யாவை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஐஸ்வர்யாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து ஐஸ்வர்யா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்கு பதிவு செய்து பிரசாந்த் என்ற வாலிபரை கைது செய்தார். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.