செய்திகள்
பெண்ணை தாக்கி நகை-பணம் கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க சேலம் விரைந்த தனிப்படை போலீசார்
நெல்லிக்குப்பம் அருகே பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சந்தானலட்சுமி(வயது 35). நேற்று முன்தினம் இரவு சந்தானலட்சுமி வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சந்தானலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்தனர்.
இதை தடுக்க வந்த சந்தானலட்சுமியின் வாயில் துணியை திணித்து அலாக்காக தோட்டத்துக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தனர். இதில் சந்தானலட்சுமி மயக்கம் அடைந்தார். பின்னர் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றனர்.
அதே பகுதியில் உள்ள விவசாயி ஆறுமுகம் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் காயம் அடைந்த சந்தானலட்சுமியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தகொள்ளை குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கொள்ளை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் டி.ஜ.ஜி.அனிஷா உசேனும் விசாரித்தார். இதையடுத்து முகமூடி கொள்ளையர்களை பிடிக்க டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், துணைபோலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் கொள்ளையர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அருகே சேமக்கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களை தாக்கி கொள்ளையர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அந்த கொள்ளை கும்பல் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எனவே அந்த கொள்ளை கும்பல் சித்தரசூரிலும் நகை-பணத்தை கொள்ளையடித்ததா? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பழைய குற்றவாளிகள், தொடர் கொள்ளையில் ஈடுபடுபவர்கள், குழுவாக வந்து தாக்கி கொள்ளையடிக்கும் முகமூடி கொள்ளையர்கள் ஆகியோரை பற்றிய முழு தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஜெயிலில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த பழைய குற்றவாளிகள் எங்கு உள்ளனர். அவர்களுக்கும் இந்த கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரிக்கின்றனர்.
கொள்ளையர்கள் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
பெண்ணை தாக்கி கொள்ளையடித்து அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்திருப்பதால் கொள்ளையர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சேலம், பெரம்பூர், திருச்சி மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையொட்டி தனிப்படை போலீசார் சேலம் மற்றும் புதுவைக்கு விரைந்து உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சந்தானலட்சுமி(வயது 35). நேற்று முன்தினம் இரவு சந்தானலட்சுமி வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சந்தானலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்தனர்.
இதை தடுக்க வந்த சந்தானலட்சுமியின் வாயில் துணியை திணித்து அலாக்காக தோட்டத்துக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தனர். இதில் சந்தானலட்சுமி மயக்கம் அடைந்தார். பின்னர் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றனர்.
அதே பகுதியில் உள்ள விவசாயி ஆறுமுகம் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் காயம் அடைந்த சந்தானலட்சுமியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தகொள்ளை குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கொள்ளை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் டி.ஜ.ஜி.அனிஷா உசேனும் விசாரித்தார். இதையடுத்து முகமூடி கொள்ளையர்களை பிடிக்க டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், துணைபோலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் கொள்ளையர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அருகே சேமக்கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களை தாக்கி கொள்ளையர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அந்த கொள்ளை கும்பல் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எனவே அந்த கொள்ளை கும்பல் சித்தரசூரிலும் நகை-பணத்தை கொள்ளையடித்ததா? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பழைய குற்றவாளிகள், தொடர் கொள்ளையில் ஈடுபடுபவர்கள், குழுவாக வந்து தாக்கி கொள்ளையடிக்கும் முகமூடி கொள்ளையர்கள் ஆகியோரை பற்றிய முழு தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஜெயிலில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த பழைய குற்றவாளிகள் எங்கு உள்ளனர். அவர்களுக்கும் இந்த கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரிக்கின்றனர்.
கொள்ளையர்கள் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
பெண்ணை தாக்கி கொள்ளையடித்து அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்திருப்பதால் கொள்ளையர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சேலம், பெரம்பூர், திருச்சி மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையொட்டி தனிப்படை போலீசார் சேலம் மற்றும் புதுவைக்கு விரைந்து உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.