செய்திகள்
கீரனூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீரனூர்:
கீரனூர் கீழ காந்தி நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது36). இவர் கொத்தனார். மனைவி ரேவதி, இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ரேவதிக்கும் கோபிநாத்திற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த கோபிநாத் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த கோபிநாத்தை கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.