செய்திகள்

வேதாரண்யத்தில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2017-02-21 14:33 IST   |   Update On 2017-02-21 14:33:00 IST
வேதாரண்யத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோடியக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 52) என்பவரும், வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே ரமேஷ் (38) என்பவரும் அனுமதியில்லாமல் மதுபானம் விற்று கொண்டிருந்தனர்.

அவர்களை கைது செய்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News