செய்திகள்

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி

Published On 2017-02-21 10:10 IST   |   Update On 2017-02-21 10:10:00 IST
வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆரியா தெருவை சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவரது மகன் ஹனீப் (24). இவர் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார்.

அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் ஹனீப் தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு குளித்து கொண்டிருந்தவர்களும், கரையில் இருந்தவர்களும் ஹனீப்பை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஹனீப் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது.

கரூர் மாவட்டம் ஆத்தூர் நொச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணிகண்டன் (24). அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார்.

கடலில் குளித்த போது அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரது உடல் கரை ஒதுங்கியது. இருவரது உடல்களையும் கீழையூர் கடற்கரை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News