செய்திகள்

சீர்காழியில் லாரி மோதி பெண் பலி

Published On 2017-02-20 15:11 GMT   |   Update On 2017-02-20 15:11 GMT
லாரி மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

சீர்காழி:

சீர்காழி பிடாரி தெற்குவீதி திருஞானசம்பந்தர் காலனியை சேர்ந்தவர் செந்தில்நாதன் மனைவி கோமதி (வயது65). இன்று காலை கோமதி கடைக்கு செல்வதற்காக பிடாரி தெற்குவீதி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியை அதன் டிரைவர் பின்புறமாக இயக்கினார்.

கோமதி மீது லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News