செய்திகள்

நடுக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் வலைகள் பறிப்பு: இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

Published On 2017-02-20 15:43 IST   |   Update On 2017-02-20 15:43:00 IST
நாகை மீனவர்கள் வலையை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர். இது குறித்து அவர்கள் கடலோர காவல் படையிடம் புகார் கொடுத்துள்ளனர்.
கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த கோவிந்தன், சக்திவேல் ஆகியோருக்கு சொந்தமான படகில் 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் வேளாங்கண்ணியில் இருந்து 35 நாட்டின் கல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் வலைகள், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மீன்களை பறித்து விரட்டியடித்தனர்.

ரூ. 11 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறி கொடுத்த நாகை மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இது குறித்து அவர்கள் கடலோர காவல் படையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அவர்களது படகுகளை சிறை பிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் வலையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News