செய்திகள்

வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்தவர் பலி

Published On 2017-02-18 17:17 IST   |   Update On 2017-02-18 17:17:00 IST
வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி கிராமம், கணபதி தேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34). இவர் சம்பவத்தன்று இரவு மருதூர் கடைத்தெருவிற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வழியில் சாலையில் உள்ள தடுப்பில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாச்சலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News