செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை உரிமையாளர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் நிரவி பகுதி வாழை கொல்லைவீதியை சேர்ந்தவர் முகமது சாபி(வயது 58). இவர் திட்டச்சேரியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் நாகூர் பனங்குடி ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தஞ்சை கலைஞர் நகரை சேர்ந்த ரமேஷ் மகன் அரவிந்த்குமார்(23) என்பவர் முகமது சாபி மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து நாகூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.