செய்திகள்

திருப்பத்தூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை

Published On 2017-02-16 18:33 IST   |   Update On 2017-02-16 18:33:00 IST
திருப்பத்தூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி பகுதியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி காஞ்சனா (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில், கணவர் சசிக்கும், காஞ்சனாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

தகராறில் சசி மனைவியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த காஞ்சனா பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவர், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனா உயிரிழந்தார்.

இதுகுறித்து கந்திலி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News