செய்திகள்

தேனி பஸ் நிலையத்தில் இளம்பெண் மாயம்

Published On 2017-02-11 09:57 GMT   |   Update On 2017-02-11 09:57 GMT
தேனி பஸ் நிலையத்தில் இளம்பெண் மாயமானதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் கம்பம் அருகே கருநாக்கமுத்தன் பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். மனைவி செல்வி, இவர்களது மகள் பவித்ரா (வயது18). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று மயிலாடும் பாறையில் உள்ள உறவினரை பார்த்து விட்டு செல்வி மற்றும் அவரது மகள் பவித்ரா இருவரும் தேனி பழைய பஸ் நிலையம் வந்து கம்பம் செல்வதற்காக காத்திருந்தனர்.

கம்பம் பஸ்சில் செல்வி ஏறி பழனிசெட்டிபட்டி அருகே சென்றபோதுதான் தனது மகள் பஸ்சில் ஏறவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பவித்ராவை தேடி வருகின்றனர்.

Similar News