செய்திகள்

தரங்கம்பாடி அருகே மீனவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2017-02-06 15:33 IST   |   Update On 2017-02-06 15:33:00 IST
தரங்கம்பாடி அருகே மீனவர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தரங்கம்பாடி:

தரங்கம்பாடி அருகே உள்ள திருமால்பேட்டை மீனவர் காலனியை சேர்ந்தவர் ராஜ். மீனவர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3½ பவுன் நகை ரூ, 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் டி.வி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

இது பற்றி ராஜ் பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News