செய்திகள்

கொள்ளிடம் அருகே மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

Published On 2017-02-05 20:59 IST   |   Update On 2017-02-05 20:59:00 IST
கொள்ளிடம் அருகே மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து நாகையில் உள்ள மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சீர்காழி:

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவர். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதில் சம்பவத் தன்று தனது மகளை ஆச்சாள்புரம் கிராமம் வள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜபாண்டியன் (வயது20) என்பவர் கடத்தி சென்றதாக கூறி இருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆச்சாள்புரம் பகுதியில் இருந்த ராஜபாண்டியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மாணவியை கடத்தி சென்று திருமண ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவர், நாகையில் உள்ள மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Similar News