செய்திகள்

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் பணம் திருட்டு

Published On 2017-02-03 14:52 IST   |   Update On 2017-02-03 14:52:00 IST
மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1¼ லட்சம் பணம் திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை காந்தி நகரில் வசித்து வருபவர் நாராயணன். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மகன் பத்மநாபன். இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

நேற்று வீடு திரும்பிய பத்பநாபன் திருட்டு நடைபெற்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.

நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுனர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News