செய்திகள்
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி
மயிலாடுதுறை அருகே உயர் அழுத்த மின் கம்பியில் கைபட்டதில் பெயிண்டர் தூக்கி வீசப்பட்டு இறந்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே அக்கலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது39). பெயின்டர். இவர் நேற்று மயிலாடு துறை ரயிலடி சாரத்தட்டை தெருவில் உள்ள அப்துல்ஹமீது என்பவரது வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். வீட்டின் வெளிபுற சுவரில் சாரம் அமைத்து பெயிண்ட் அடித்தபோது அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தவறுதலாக கைபட்டதில் சரவணனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.