செய்திகள்
ஈரோடு அருகே பாட்டி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற பேத்தி
ஈரோடு அருகே பாட்டி தலையில் கல்லை தூக்கி போட்டு பேத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த வடமுகம் வெள்ளோட்டில் உள்ள சல்லிமேடு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் திருமலை .இவரது மனைவி சுண்டைக்காரம்மா என்ற பொன்னழகி (வயது 75). திருமலை இறந்து 3 வருடம் ஆகிறது.
பொன்னழகி அங்குள்ள ஒரு டாக்டான் விவசாய தோட்டத்தை கவனித்து வந்தார். மேலும் சுண்டைக்காய் வியாபாரமும் செய்து வந்தார்.
இவரது மகன் அம்மாசை , கட்டிட தொழிலாளி. இவரதுமகள் சந்திரா (வயது 22). இவருக்கு திருமணமாகி கணவருடன் வாழாமல் தனது தந்தையின் வீட்டுக்கு வந்து விட்டார்.
இது தொடர்பாக சந்திராவுக்கும் அவரது பாட்டி பொன்னழகிக்கும் தகராறு இருந்து வந்தது. கணவனுடன் ஒழுங்காக குடும்பம் நடத்தாமல் இப்படி இங்கு வந்து விட்டாயே... என்று பாட்டி சத்தம் போட்டு கொண்டு வந்தாராம்.
இது தொடர்பாக நேற்றும் அவர்களிடையே தகராறு ஏறபட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்திரா கல்லை எடுத்து பாட்டி பொன்னழகியின் தலையில் போட்டார்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த பொன்னழகி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். பேத்தி அங்கிருந்து ஓடி விட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஞானப்பிரகாசம் (அரச்சலூர்), மகாலிங்கம் (சென்னிமலை ) ரவி (மலையம்பாளையம்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் துப்பறியும் நாய் வீராவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. பாட்டி பொன்னழகியின் உடலை மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடியது.
விசாரணை முடிந்ததும் பொன்னழகியின் உடல் பிரேத பாசோதனைக்கு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவை தேடி வருகிறார்கள்.
பாட்டி தலையில் கல்லை தூக்கி போட்டு பேத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு அடுத்த வடமுகம் வெள்ளோட்டில் உள்ள சல்லிமேடு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் திருமலை .இவரது மனைவி சுண்டைக்காரம்மா என்ற பொன்னழகி (வயது 75). திருமலை இறந்து 3 வருடம் ஆகிறது.
பொன்னழகி அங்குள்ள ஒரு டாக்டான் விவசாய தோட்டத்தை கவனித்து வந்தார். மேலும் சுண்டைக்காய் வியாபாரமும் செய்து வந்தார்.
இவரது மகன் அம்மாசை , கட்டிட தொழிலாளி. இவரதுமகள் சந்திரா (வயது 22). இவருக்கு திருமணமாகி கணவருடன் வாழாமல் தனது தந்தையின் வீட்டுக்கு வந்து விட்டார்.
இது தொடர்பாக சந்திராவுக்கும் அவரது பாட்டி பொன்னழகிக்கும் தகராறு இருந்து வந்தது. கணவனுடன் ஒழுங்காக குடும்பம் நடத்தாமல் இப்படி இங்கு வந்து விட்டாயே... என்று பாட்டி சத்தம் போட்டு கொண்டு வந்தாராம்.
இது தொடர்பாக நேற்றும் அவர்களிடையே தகராறு ஏறபட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்திரா கல்லை எடுத்து பாட்டி பொன்னழகியின் தலையில் போட்டார்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த பொன்னழகி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். பேத்தி அங்கிருந்து ஓடி விட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஞானப்பிரகாசம் (அரச்சலூர்), மகாலிங்கம் (சென்னிமலை ) ரவி (மலையம்பாளையம்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் துப்பறியும் நாய் வீராவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. பாட்டி பொன்னழகியின் உடலை மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடியது.
விசாரணை முடிந்ததும் பொன்னழகியின் உடல் பிரேத பாசோதனைக்கு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவை தேடி வருகிறார்கள்.
பாட்டி தலையில் கல்லை தூக்கி போட்டு பேத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.