செய்திகள்

சத்தியமங்கலத்தில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2017-01-30 16:26 IST   |   Update On 2017-01-30 16:26:00 IST
சத்தியமங்கலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம், சின்னட்டிபாளையம், ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

தங்கராஜிக்கு வயிற்றுவலி இந்ததாக கூறப்படுகிறது. இதற்ஙகாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். எனினும் வயிற்றுவலி குணமாக வில்லை என கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கராஜ் தற்கொலை செய்ய முடிவெடித்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்து மயங்கினார்.

தங்கராஜை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News