செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலான மழை விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2017-01-28 17:21 GMT   |   Update On 2017-01-28 17:21 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. மேலும் இரவு நேரங்களில் கடும் பனி கொட்டி வந்தது. வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே சாலையோரங்களில் இளநீர், கறும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது.

மேலும் வாகன ஓட்டுனர்கள் முகத்தை மூடியவாறு சென்று வந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலையும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், நாகுடி, ஆயிங்குடி பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஆதனக்கோட்டை-4, பெருநல்லூர்-6, புதுக்கோட்டை-2, ஆலங்குடி-3, அறந்தாங்கி-5, ஆயிங்குடி-17, நாகுடி-25, மீமிசல்-3, ஆவுடையார்கோவில் 37, கந்தர்வகோட்டை-5, இலுப்பூர்-2, அன்னவாசல்-3, கறம்பக்குடி-17, மழையூர்-8, உடையாளிப்பட்டி-6, கீரனூர்-4, மணமேல்குடி-5, கீழாநிலை-11, திருமயம்-2, அரிமளம்-5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Similar News