செய்திகள்

கும்பகோணத்தில் வீட்டில் சாராயம் பதுக்கிய பெண் கைது

Published On 2017-01-28 10:48 GMT   |   Update On 2017-01-28 10:48 GMT
கும்பகோணத்தில் வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சுவாமிமலை:

கும்பகோணம் அரசலாறு வழிநடப்பு தோப்புத் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி மோகனாம்பாள் (வயது 35). இவரது வீட்டில் சாராயம் பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் பதுக்கிவைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து மேகனாம்பாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News