செய்திகள்

கோபி அருகே அரசு ஊழியர் வி‌ஷம் குடித்து தற்காலை

Published On 2017-01-28 10:29 GMT   |   Update On 2017-01-28 10:29 GMT
கோபி அருகே அரசு ஊழியர் வி‌ஷம் குடித்து தற்காலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:

கோபி அருகே உள்ள குள்ளம் பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 64).

இவர் தர்மபுரியில் உள்ள அரசு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் பல இடங்களில் வைத்தியம் பார்த்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம்.

இதனால் கிருஷ்ணசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதன் காரணமாக அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே கோபி அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News