செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே ஐ.டி.ஐ. மாணவன் மாயம்
ஜெயங்கொண்டம் அருகே பெரியப்பா வீட்டில் தங்கி படித்த ஐ.டி.ஐ. மாணவன் மாயமானான். இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் ராஜாகொல்லை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் கூலி தொழிலாளியான இவர் பாண்டிசேரியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மோகன் (வயது20). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது பெரியப்பா பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் ஐ.டி.ஐ-யில் படித்து வருகின்றார்.
கடந்த 23-ம் தேதியன்று ஐ.டி.ஐ-க்கு செல்வதாக கூறி சென்ற மோகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மோகனின் பெரியப்பா பாலசுப்ரமணியன் உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததையடுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் ராஜாகொல்லை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் கூலி தொழிலாளியான இவர் பாண்டிசேரியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மோகன் (வயது20). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது பெரியப்பா பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் ஐ.டி.ஐ-யில் படித்து வருகின்றார்.
கடந்த 23-ம் தேதியன்று ஐ.டி.ஐ-க்கு செல்வதாக கூறி சென்ற மோகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மோகனின் பெரியப்பா பாலசுப்ரமணியன் உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததையடுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.