செய்திகள்

திண்டுக்கல் அருகே தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

Published On 2017-01-27 10:15 GMT   |   Update On 2017-01-27 10:15 GMT
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்திலிருந்து சத்திரப்பட்டிக்கு அனைத்து அரசு பஸ்களிலும் ரூ.7 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து தனியார் பஸ்களிலும் ரூ.8 வசூலிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்திலிருந்து சத்திரப்பட்டிக்கு அனைத்து அரசு பஸ்களிலும் ரூ.7 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து தனியார் பஸ்களிலும் ரூ.8 வசூலிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

கூடுதல இதேபோல் ஒட்டன்சத்திரத்திலிருந்து சமத்துவபுரத்திற்கு அனைத்து அரசு பஸ்களில் ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து தனியார் பஸ்களில் ரூ.7 வசூலிக்கப்படுவதால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் தினமும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News