செய்திகள்

விலையில்லா கறவை மாடு பயனாளிகள் தேர்வில் முறைகேடு

Published On 2017-01-24 17:55 IST   |   Update On 2017-01-24 17:55:00 IST
விலையில்லா கறவை மாடு வழங்க பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் சப்- கலெக்டர் அலுவலகத்தில் இன்று முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள பா.முத்தம்பட்டி கிராமத்தில் அரசு விலையில்லா கறவை மாடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நேற்று மாலை பா.முத்தம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் சப்- கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கறவை மாடு பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. சப்-கலெக்டர் நேரடி பார்வையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பின்னர் இது தொடர்பாக சப்-கலெக்டர் கார்த்தி கேயனிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Similar News