செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27–ந்தேதி நடக்கிறது

Published On 2017-01-21 21:28 IST   |   Update On 2017-01-21 21:28:00 IST
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27–ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27–ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இதில் மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Similar News