செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்: உண்ணாவிரதம் இருந்த 2 பேர் மயக்கம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 7 பேர் மயங்கி விழுந்தனர். போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே மயங்கி விழுந்த மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
கடலூர்:
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 7 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும்வரை எங்கள் உண்ணாவிரதத்தை கைவிடபோவதில்லை என்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உடனே மருத்துவரை வரவழைத்தனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே மயங்கி விழுந்த மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 7 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும்வரை எங்கள் உண்ணாவிரதத்தை கைவிடபோவதில்லை என்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உடனே மருத்துவரை வரவழைத்தனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே மயங்கி விழுந்த மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.