செய்திகள்

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2017-01-18 11:00 GMT   |   Update On 2017-01-18 11:00 GMT
பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராவூரணி:

பேராவூரணி அருகே உள்ள பூலான்கொல்லையை சேர்ந்தவர் கணேசன் (வயது 28), இவரது நண்பர் முருகன் (வயது 25). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துள்ளார்.

அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளும் திடீரென நேருக்கு நேர் மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணேசன் பரிதாபமாக இறந்தார். ரஞ்சித் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், முருகன் பேராவூரணி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி பேராவூரணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News