செய்திகள்

நீடாமங்கலம் அருகே முன் விரோதத்தில் விவசாயி கொலை

Published On 2017-01-16 09:44 GMT   |   Update On 2017-01-16 09:44 GMT
நீடாமங்கலம் அருகே முன் விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஒட்டக்குடி கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது27). விவசாயி. மன்னார்குடி அருகே உள்ள தோட்டச்சேரியை சேர்ந்தவர் சேகர்(45). இவர் ஒட்டக் குடியில் தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் தமிழ்ச்செல்வன் குடும்பத்துக்கும், சேகர் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று சேகர் வீட்டிற்கு தோட்டச்சேரியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் 4 பேர் வந்தனர். அவர்களை கிராமத்தினர் இங்கு நீங்கள் வரக்கூடாது வந்தால் தகராறு ஏற்படுகிறது என ஏற்கனவே அறிவுறுத்தியும், எப்படி வந்தீர்கள் எனக்கேட்டனர். அப்போது தமிழ்ச்செல்வன் தரப்பினருக்கும், சேகர் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சேகர் மற்றும் அவரது உறவினர் தோட்டச்சேரி கிராமத்தைச்சேர்ந்த சிலர் இரும்புக்கம்பியால் தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாய மடைந்த அவரை உடனே நீடாமங்கலம் அரசு மருத்து வமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய தோட்டச்சேரியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News