செய்திகள்

சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 3¾ பவுன்-டி.வி. கொள்ளை

Published On 2017-01-09 18:22 IST   |   Update On 2017-01-09 18:22:00 IST
வீட்டில் புகுந்து நகை- டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை நகர் முத்து நகரைச் சேர்ந்தவர் கொங்கேஸ்வரி (வயது24). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நைசாக காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்தனர்.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்தது. பீரோவை திறந்து அதில் இருந்த 3¾ பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டி.வி., ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

வீடு திரும்பிய கொங்கேஸ்வரி, கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

Similar News