செய்திகள்
திருப்பத்தூரில் கல்லூரி மாணவி மாயம்
திருப்பத்தூரில் கல்லூரி மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.போலீசார் வழக்குப்பதிவு செய்த மாணவியை தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
திருப்பத்தூர் நகர் பிரபாகரன் காலனியைச் சேர்ந்தவர் முகமது அஸ்ரப் (வயது 42). இவரது மகள் தஸ்லிமா பானு (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல தஸ்லிமா பானு கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதன் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது உறவினர் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களிலும் பெற்றோர் தேடினர். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் போலீசில் முகமது அஸ்ரப் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் வழக்குப்பதிவு செய்து மாயமான தஸ்லிமா பானுவை தேடி வருகிறார். அவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.