செய்திகள்

சென்னையில் மாயமான 3 மீனவர்கள் உடல் நாகையில் கரை ஒதுங்கியது

Published On 2016-12-28 09:19 GMT   |   Update On 2016-12-28 09:19 GMT
சென்னையில் மாயமான 3 மீனவர்கள் உடல் நாகையில் கரை ஒதுங்கியது. இறந்து கரை ஒதுங்கிய 3 பேரும் சென்னையில் மாயமான மீனவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.


   
  

ராயபுரம்:

காசிமேட்டை சேர்ந்த ரவீந்திரன் தலைமையில் 10 மீனவர்கள் கடந்த 3-ந்தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நாகை மாவட்டம் புதுப்பட்டினம் கடற்கரையில் 2 ஆண்கள் பிணம் கரை ஒதுங்கியது. இதேபோல் பூம்புகார் அருகிலும் ஒரு ஆண் உடல் கரை ஒதுங்கியது. அவர்களது சட்டையில் புதுவண்ணாரப்பேட்டை டெய்லர் முகவரி உள்ளது.
எனவே இறந்து கரை ஒதுங்கிய 3 பேரும் சென்னையில் மாயமான மீனவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

Similar News