செய்திகள்

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தை கட்சியினர் வலியுறுத்தல்

Published On 2016-12-27 16:19 GMT   |   Update On 2016-12-27 16:19 GMT
அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரியலூர்:

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் செல்வநந்தி தலைமையில் நடைபெற்றது.
மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் அன்பானந்தம், தேர்தல் பிரிவு மாநில துணை செயலாளர் தன கோடி, விவசாய அணி துணை செயலாளர் கருப்புசாமி. வேல்முருகன், மாவட்ட பொருளாளர் வேணுகோபால்பிள்ளை, தொகுதி செயலாளர் மதி, இலக்கியதாசன், செல்வமணி, மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன், அரியலூர் சுதாகரன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது, அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனவும், அரியலூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டுமெனவும், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி கல்வி கட்டணத்தை முறைபடுத்த வேண்டுமெனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.    

Similar News