செய்திகள்

மீனம்பாக்கத்தில் டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2016-12-27 09:19 GMT   |   Update On 2016-12-27 09:19 GMT
மீனம்பாக்கத்தில் டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

திருவண்ணாமலை அருகேயுள்ள பெருமணம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (50). மீனம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை வேலை நடக்கிறது. அதில் இவர் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி வந்த டேங்கர்லாரி தடுப்பை உடைத்துக் கொண்டு இவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். லாரி டிரைவர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர்.

Similar News