செய்திகள்

சோழிங்கநல்லூரில் 2 வாலிபர்களிடம் கத்தி முனையில் பணம் - செல்போன் கொள்ளை

Published On 2016-12-26 09:52 GMT   |   Update On 2016-12-26 09:52 GMT
சோழிங்கநல்லூரில் 2 வாலிபர்களிடம் கத்தி முனையில் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவான்மியூர்:

சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி ஜவகர் நகர் எழில்முகநகரை சேர்ந்தவர்கள் ரஞ்சித் குமார், நித்தீஸ் குமார். இருவரும் அந்த பகுதியில் அருகில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்றனர்.

அப்பொழுது ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல், மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் நடந்து சென்றவர்களிடம் விலாசம் கேட்பது போல், அருகில் வந்து திடீரென கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் அவர்களிடம் இருந்து 4,000 ரூபாய் பணம், மற்றும் விலையுயர்ந்த இரண்டு செல்போன்களை மர்மகும்பல் பறித்து சென்றனர். இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றறவாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த 12ம் தேதி வார்தா புயல் வீசியதால் இந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி, மின் கம்பங்கள் பழுதடைந்தன.இதனால், மின்சாரம் இல்லாமல் இருளடைந்து காணப்பட்டது. இதனால், பணிக்கு சென்று வீடு திரும்பும் பொதுமக்களிடம் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால், குற்றங்கள் குறையும். என்று தெரிவித்தனர்.

Similar News