செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு

Published On 2016-12-16 07:02 GMT   |   Update On 2016-12-16 07:02 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் புயல் பாதித்த இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:

வார்தா புயலில் காஞ்சீபுரம் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் புயல் பாதித்த இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜாவும், காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக் கண்ணுவும், செய்யூர் பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் நேரடியாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

ஆய்வின்போது மின்சார வாரியம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பொதுப் பணித்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைகள் துறை, சுகாதாரத்துறை உள்பட அனைத்து அலுவலர்களுடன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், சாலைகளில் உள்ள மரங்களை உடனடியாக அகற்றவும், மின்சார கம்பங்களை சரி செய்து உடனடியாக மின்வசதியை கொடுக்கவும், சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டனர்.

Similar News