செய்திகள்

சிங்கம்புணரி அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

Published On 2016-12-09 13:00 IST   |   Update On 2016-12-09 13:00:00 IST
சிங்கம்புணரி அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகையை மர்ம மனிதர்கள் திருடிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கம்புணரி, டிச. 9-


சிங்கம்புணரி அருகே உள்ள புதூர் ஒன்றியத்திற் குட்பட்ட கட்டுகுடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது62), விவ சாயி. இவரது மனைவி லட்சுமி (53).

இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சுப்பையா பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார்.

அதன் பின்னர் லட்சுமி, ஆடுகளை மேய்ப்பதற்காக வயலுக்கு புறப்பட்டுள்ளார். வீட்டை பூட்டிய அவர், சாவியை வழக்கம்போல் ஒரு மறைவான இடத்தில் வைத்து சென்றுள்ளார்.

இந்த சூழலில் சுப்பையா வீடு திரும்பி உள்ளார். கதவு திறந்து கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்,

அப்போது பீரோவை யாரோ திறந்து அதில் இருந்த 10 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பது தெரியவர, சுப்பையா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உலகம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசா ரணை நடத்தினர். வீட்டின் சாவியை லட்சுமி மறைவான இடத்தில் வைத்திருப்பதை நோட்டமிட்ட யாரோ, ஒரு வன், அதன் பிறகு அதனை எடுத்து வீட்டுக்குள் சென் றுள்ளான்.

அங்கு பீரோவின் சாவி இருந்ததால் அதனை எடுத்து நகையை திருடிச்சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதனை தேடி வருகின் றனர்.

Similar News