செய்திகள்

பொறையாறு அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2016-12-08 17:35 IST   |   Update On 2016-12-08 17:36:00 IST
பொறையாறு அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் பொறையாறு இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையிலான போலீசார் தில்லையாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 96 மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மதுபாட்டில்கள் மற்றும் கடத்திவந்த சீர்காழி கேவரோடையை சேர்ந்த சுரேஷ், வெள்ளக்குளத்தை சேர்ந்த குபேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

Similar News