செய்திகள்

ஜெயலலிதா மரணம்: ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒரு பெண் பலி

Published On 2016-12-08 13:05 IST   |   Update On 2016-12-08 13:05:00 IST
ஈரோடு மாவட்டத்தில் ஜெயலலிதா மறைவு செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த பெண் அதிர்ச்சியில் உயிரிழந்தார்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டியை சேர்ந்தவர் கந்தாயி (வயது 61). மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழக அரசின் முதியோர் பென்சன் பணம் பெற்று வந்தார்.

ஜெயலலிதா மறைவு செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அவரது இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்த கந்தாயி மிகவும் வேதனை அடைந்தார்.

டி.வி.செய்தியை பார்க்க.. பார்க்க கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தார்.

பிறகு அதிர்ச்சியில் மூர்ச்சையற்று கந்தாயி மயங்கி சாய்ந்தார். அதே இடத்தில் அவர் இறந்தார்.

“முதல்வர் அம்மா எனக்கு முதியோருக்கான பணம் கொடுத்து வந்தாரே இனி யார் தரப் போகிறார்கள்” என்று கூறி கொண்டே அதிர்ச்சியில் அவர் இறந்து விட்டார்.

இவருடன் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 7பேர் இறந்துள்ளனர்.

Similar News