செய்திகள்

கோபி அருகே போலீஸ் ஏட்டு விபத்தில் பலி: போலீசார் விசாரணை

Published On 2016-12-03 16:00 IST   |   Update On 2016-12-03 16:00:00 IST
கோபி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையம் என்ற இடத்தை சோந்தவர் சிவகுமார் (வயது 38). இவர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். இவர் கோபி ரோட்டில் உள்ள அளுக்குளி அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கொடி வோரியில் இருந்து நம்பியூருக்கு ஒரு மினி லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி எதிர்பாராத விதமாக போலீஸ் ஏட்டு சிவகுமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சிவகுமார் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் அணிந்து இருந்த ஹெல்மெட் மீது லாரி ஏறியதால் உடைந்து நொறுங்கியது .

இது பற்றி தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த சிவகுமாரின் உடலை மீட்டனர். இதன்பிறகு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் சத்திய மங்கலம் டி.எஸ்.பி பழனிச்சாமி ஆகியோர் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு சிவகுமாருக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். விபத்தில் இறந்த சிவகுமாருக்கு நந்தினி (35) என்ற மனைவியும், மதின வதினி (9) என்ற மகளும், லிங்க வாசன் (4) என்ற மகனும் உள்ளனர்.

மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களும் விபத்தில் இறந்த எட்டு சிவகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

Similar News