செய்திகள்

மாமல்லபுரத்தில் ஏ.டி.எம். இருட்டில் இயங்குவதால் சுற்றுலா பயணிகள் அச்சம்

Published On 2016-12-03 06:50 GMT   |   Update On 2016-12-03 06:50 GMT
மாமல்லபுரத்தில் கடந்த 2 வாரங்களாக ஏ.டி.எம். அறையில் எந்த மின் விளக்கும் இல்லாமல் இயங்குவதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும் உள்ளூர் மக்களும் பணம் எடுப்பதற்கு வசதியாக 5 இடங்களில் ஏ.டி.எம். சென்டர் இயங்கி வருகிறது.

ரூ.500, 1000 செல்லாதது என்ற அறிவிப்பை அடுத்து 4 இடங்களில் உள்ள ஏ.டி.எம். மிஷின்கள் இயங்கவில்லை.

மாமல்லபுரம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மட்டும் காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் கடந்த 2 வாரங்களாக ஏ.டி.எம். அறையில் எந்த மின் விளக்கும் இல்லாமல் இருட்டாக உள்ளது.

பணத்தை எண்ணி சரிபார்க்க முடியாமல் திருட்டு பயத்துடன் சுற்றுலா பயணிகள் வெளியே வந்து மோட்டார் சைக்கிள் வெளிச்சத்தில் சரிபார்த்து செல்கிறார்கள். இருட்டாக இருப்பதால் வெளியூர் பயணிகளுக்கு ஏ.டி.எம். இருப்பதும் தெரியவில்லை. மற்ற ஏடிஎம்களும் இயங்காததால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பணம் எடுத்து செலவு செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி இருக்கும் வியாபாரிகளும் வியாபாரம் இன்றி சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

Similar News