செய்திகள்

நடா புயல் வலுவிழந்து கரையை கடந்தது: மாமல்லபுரத்தில் 11 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது

Published On 2016-12-02 14:05 IST   |   Update On 2016-12-02 14:06:00 IST
நடா புயல் காரணமாக நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று அதிகாலை நடா புயல் வலுவிழந்து கரையை கடந்தது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
காஞ்சீபுரம்:

தென்மேற்கு வங்க கட லில் உருவான ‘நடா’ புயல் வலுவிழந்து இன்று அதிகாலை காரைக்காலுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது.

புயல் சின்னம் காரணமாக நேற்று அதிகாலை முதல் இரவு வரை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை கொட்டியது.

அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 சென்டி மீட்டர் மழை கொட்டி உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

காஞ்சீபுரம் - 27.5
செங்கல்பட்டு - 39.8
ஸ்ரீபெரும்புதூர் - 23.5
தாம்பரம் - 14.4
திருக்கழுக்குன்றம் - 70.6
கேளம்பாக்கம் - 31.6
உத்திரமேரூர் - 40.2
செய்யூர் - 30

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

சோழவரம் - 57
செங்குன்றம் - 57
கும்மிடிப்பூண்டி - 39
தாமரைப்பாக்கம் - 33
பொன்னேரி - 31
செம்பரம்பாக்கம் - 27
பூந்தமல்லி - 27
பூண்டி - 26
திருத்தணி - 25
திருவள்ளூர் - 23
அம்பத்தூர் - 21
திருவல்லங்கோடு - 21
ஊத்துக்கோட்டை - 17
ஆர்.கே.பேட்டை - 13
பள்ளிப்பட்டு - 3

Similar News