செய்திகள்

வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அய்யப்ப பக்தர் பலி

Published On 2016-11-27 12:19 GMT   |   Update On 2016-11-27 12:19 GMT
வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கில் உள்ள ஒரு வியாபார நிறுவன குடோனுக்கு நாகையிலிருந்து மினி லாரியில் ஹார்லிக்ஸ் பெட்டிகள் வந்தது. அதை குடோன் அருகே நிறுத்தி லோடு மேன் நாகப்பட்டினம் மாங்கொட்டைசுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த வேணுகோபால் (38) என்பவர் இறக்கி கொண்டிருந்தார்.

அப்போது வேதாரண்யத்திலிருந்து அதிவேகமாக சென்ற வாகனம் மினி லாரியின் பின் கதவில் மோதியது. இதில் வேணுகோபால் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவதாஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இறந்த வேணுகோபால் சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்தார். மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News