செய்திகள்

பணம் மாற்ற வங்கிக்கு சென்ற விவசாயி கார் மோதி பலி

Published On 2016-11-16 17:35 IST   |   Update On 2016-11-16 17:35:00 IST
பணம் மாற்ற வங்கிக்கு சென்ற விவசாயி பலியான சம்பவம் சிவகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பூலாவலசு பனங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் குப்புச்சாமி (வயது 72) விவசாயி. இவர் தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக கந்தசாமி பாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு சென்றுள்ளார்.

ஈரோட்டிலிருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் தனது சைக்கிளில் குப்புச்சாமி சென்றபோது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று விவசாயி குப்புச்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே குப்புச்சாமி பலியானர். விபத்து குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் விசாரித்து வருகிறார்.

பணம் மாற்ற வங்கிக்கு சென்ற விவசாயி பலியான சம்பவம் சிவகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News