செய்திகள்

பூவந்தி அருகே மில் வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்

Published On 2016-11-15 15:41 IST   |   Update On 2016-11-15 15:41:00 IST
மில் வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி. இவரது மகள் மந்தையம்மாள் (வயது15).

இவர் ஒக்கூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த 13-ந்தேதி வேலைக்கு சென்ற மந்தையம்மாள் மாலையில் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து பூவந்தி போலீசில் கருப்பாயி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மந்தையம்மாளை தேடி வருகிறார்.

Similar News