செய்திகள்
பூவந்தி அருகே மில் வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்
மில் வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி. இவரது மகள் மந்தையம்மாள் (வயது15).
இவர் ஒக்கூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த 13-ந்தேதி வேலைக்கு சென்ற மந்தையம்மாள் மாலையில் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து பூவந்தி போலீசில் கருப்பாயி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மந்தையம்மாளை தேடி வருகிறார்.