செய்திகள்

சிவகங்கையில் வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-11-14 15:28 IST   |   Update On 2016-11-14 15:28:00 IST
சிவகங்கையில் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:

ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி அனைத்து அரசு, தனியார் வங்கிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற்று வருகின்றன. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தற்போது வரை பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்படவில்லை. இந்த வங்கியில் நகைக்கடன் பெற்றவர்கள் கடனை செலுத்த பழைய ரூபாய் நோட்டுகளுடன் வந்தனர்.

ஆனால் வங்கி ஊழியர்கள் அதனை பெறவில்லை. இதனால் அவர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து விரக்தியுடன் திரும்பினர்.

இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பழைய நோட்டுகளை பெறாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பழைய நோட்டுகளை பெற அனுமதிக்கக்கோரி நாங்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

Similar News