திருப்போரூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த 5 வாலிபர்கள் கைது
திருப்போரூர்:
திரூப்போரூர் அடுத்த காயாரை ஈச்சங்காட்டை சேர்ந்தவர் நிர்மலா. தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நிர்மலா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மற்றும் அவரது செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் பறித்து சென்ற செல்போன் மூலம் துப்பு துலக்கினர். விசாரணையில் கண்ணாபுரத்தை சேர்ந்த விஜய், கார்த்திக், சதீஷ்குமார் உள்பட 5 பேர் நிர்மலாவிடம் செயினை பறித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 5 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் மோட்டார் சைக்கிளில் திருட்டு வழக்கில் தண்டலத்தை சேர்ந்த ஏழுமலை, பிரகாஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து 3 பவுன் செயின், செல்போன் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.