செய்திகள்
சிவகங்கை அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை அபேஸ்
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவஙக்கை அருகே தேவகோட்டை கீழ மருத குளத்தை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 60). இவர் நேற்று பொதுகுறிச்சியில் இருந்து தேவகோட்டைக்கு பஸ்சில் வந்துகொண்டு இருந்தார்.
பின்னர் ஊருக்கு வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கும்போது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பஸ்சில் இருக்கும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி குணசுந்தரி கழுத்தில் கிடந்த நகையை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தேவகோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முகமது தாரீக் அல்லமின் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.