செய்திகள்

மின் வாரிய பெண் ஊழியர் வீட்டில் கொள்ளை

Published On 2016-11-09 15:49 IST   |   Update On 2016-11-09 15:49:00 IST
மின் வாரிய பெண் ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் உஷாராணி (வயது 40). இவரது கணவர் துரைசாமி இறந்துவிட்டார்.

உஷாராணி மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இன்று காலை அவர் வேலைக்கு சென்றார். வீட்டில் அவரது மாமியார் மட்டும் இருந்தார்.அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News