செய்திகள்

காரைக்குடியில் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கை: கல்லூரி பேராசிரியர் கைது

Published On 2016-11-09 15:46 IST   |   Update On 2016-11-09 15:46:00 IST
கல்லூரி மாணவர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் சிலரை, அந்த கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக புகார் வந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் அழகப்பாபுரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதனை தொடர்ந்து புகார் கூறப்பட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டார். இவர் பல மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News