செய்திகள்

ராகுல்காந்தி கைது கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2016-11-05 17:04 GMT   |   Update On 2016-11-05 17:04 GMT
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:

டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்த சென்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் பழனிசாமி, மாவட்ட துணைத்தலைவர் கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கையில் கொடியை பிடித்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள்சந்திரசேகர், சீமான், மாவட்ட தொழிற்சங்கம் சிவக்குமார், பிச்சைப்பிள்ளை,ரவிசந்திரபோஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News